close
Choose your channels

சென்னை கல்லூரி பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்: காதல் தோல்வியா?

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் அந்த கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த ஒருவர் திடீரென சமீபத்தில் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வி என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சென்னை மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த ஹரிசாந்திக்கும் அதே கல்லூரியில் பணிபுரிந்த நட்ராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் நடராஜூக்கு திடீரென வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஹரிசாந்தி, நடராஜ்க்கு திருமணம் ஆனாலும் பரவாயில்லை, தன்னையும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்ததாக தெரிகிறது.

இதனால் தான் அவர் வேலையில் இருந்து நின்ற பின்னரும் நடராஜை காண்பதற்காகவே அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்து போவது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை பெரிதாகியதை அடுத்தே கடந்த 17ஆம் தேதி காலை கல்லூரிக்கு வந்த ஹரிசாந்தி, வகுப்பறையிலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடராஜை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.