நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று திடீரென காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்தது. கோவில் பூட்டியதற்கான காரணம் தெரியாததால் பொதுமக்களும் பக்தர்களும் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான கோவிலில் அகோரிகள் என்று கூறப்படும் நிர்வாண சாமியார்கள் இருவர் வழிபாடு செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று கூறப்படும் இந்த அகோரிகள் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலில் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் கோவிலை சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தவே நடை சாத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

கதிராமங்கலம் மக்களுக்காக உயிரையே கொடுக்க துணிந்த டிராபிக் ராமசாமி

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

எல்லா கேள்விகளுக்கு இன்று பதில்: பிக்பாஸ் கமல் அறிவிப்பு

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பமாகி இன்று ஒரு மாநிலமே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிக்கும் அளவுக்கு உள்ளது.

கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி ரகுராம் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொப்புள் கருத்துக்காக மன்னிப்பு கேட்ட நடிகை டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி என பிசியான நடிகையாக மாறினார்.