close
Choose your channels

சென்னை மெரினா கடற்கரையில் பயிற்சி டாக்டர் தற்கொலை: பெரும் பரபரப்பு

Saturday, May 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்துவரும் அர்ஜூன் என்ற 35 வயது பயிற்சி டாக்டர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருப்பதாக தெரிகிறது. மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை என்பதும் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று தனது காரை சென்னை மெரினா கடற்கரைக்கு ஓட்டி வந்த டாக்டர் அர்ஜுன், காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு மெரினா கடலில் சென்று தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் தற்கொலைக்கு முன்னர் தனது சகோதரருக்கு அவர் காரின் லொகேஷனை வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார் என்பதும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும் அம்மா அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சகோதரருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

சென்னையை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.