இன்று சென்னையில் 1000% மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வந்தது. நிலத்தடி நீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கே மக்கள் திண்டாடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்த மழை இன்னும் சில நாட்கள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களின் அறிக்கை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
குடையை எடுத்து வைத்து கொள்ளுங்கள். சென்னையிலும் மற்றும் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் இன்று மழை பெய்ய போகிறது. 100 சதவீதம் என்று சொல்ல மாட்டேன். 1000 சதவீதம் என்று கூறுகிறேன். இன்றைக்கு மழை பெய்யா விட்டால் வானிலையை பற்றி விளக்குவதில் அர்த்தம் இல்லை.
இன்றைய நாளை ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம். சென்னை மட்டும் அல்ல, வட தமிழ்நாடே மழை பெறப் போகிறது. உபரியாக கோவை, நீலகிரி மற்றும் அதற்கு அருகில் உள்ள மாவட்டங்கள் ஆன ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களும் மழை பெற போகின்றன.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளும் மழை பெற போகின்றன. தென் தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களும் மழை பெற போகின்றன. தமிழ் நாட்டில் இருந்து இன்று மழை கிட்டாமல் இருந்தால் நீங்கள் துரதிஷ்டசாலி தான். இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். இன்னும் நிறைய பதிவுகள் இட உள்ளேன்' இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

More News

நானும் விஜய்சேதுபதியும் ஒன்றுமில்லாமல் வந்தவர்கள். இளையராஜா

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

'பாகுபலி'க்கு இணையான மும்மொழி படத்தில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காஷெட்டி நடித்த தேவசேனா கேரக்டருக்கு முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், நயன்தாராவின் தேதிகள் கிடைக்காததால், அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றதாகவும் கூறப்படுவதுண்டு.

சிவகார்த்திகேயன் படத்தில் அஜித் பட வில்லன்

அஜித், ஆர்யா, நயன்தாரா நடித்த 'ஆரம்பம்' படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்த மகேஷ் மஞ்ச்ரேக்கரை யாரும் மறந்திருக்க முடியாது...

திலீப் கைது எதிரொலி: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகர் திலீப், நடிகை பாவனா வழக்கில் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உண்மை வென்றது! பாவனா சகோதரரின் நெகிழ்ச்சியான அறிக்கை

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்...