close
Choose your channels

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் சென்னை பெண் மரணம்

Thursday, April 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த தேர்தல் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஒருசிலரால் ஓட்டு போட முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தியாவே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையிலும் இன்னும் வாக்காளர் பட்டியல் என்ற பழைய முறையில் வாக்கு போட அனுமதிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாததால் அவர் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது இதுகுறித்து அவர் தேர்தல் அதிகாரியிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஓட்டு போட வந்தவர் தனக்கு ஓட்டு இல்லை என்று தெரிந்ததும் உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதம் செய்தவர் திடீரென மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.