close
Choose your channels

2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி

Monday, November 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் தனது முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால், இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் சுந்தர், வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என தெரிகிறது.

அவ்வாறு இந்த வாரம் அவர் வீட்டிற்கு வந்திருந்த போது மனைவியின் கழுத்தில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தன்னை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் தங்க நகையை பறித்துச் சென்று விட்டதாக கூறினார்

இதனையடுத்து மனைவியை அழைத்து கொண்டு வடபழனி காவல் நிலையத்தில் கணவர் சுந்தர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இரண்டு இளைஞர்களிடமும், சுந்தரின் மனைவியிடமும் போலீசார் விசாரணை செய்தபோது இரண்டு இளைஞர்களும் சுந்தரின் இரண்டாவது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் இருவரும் சுந்தரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர் என்பதும், சுந்தரின் மனைவியே தனது நகையை அவர்களுக்கு கொடுத்திருந்தார் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது போலீசார் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.