close
Choose your channels

மனைவியின் நிர்வாண படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த கணவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Friday, September 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாலதி என்பவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் ஒருசில மாதங்களில் மாலதிக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்

இதன் பின்னர் மாலதி, விஜயபாரதி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் முதலில் சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில் திடீரென விஜயபாரதி தனது உண்மையான சொரூபத்தை காண்பித்தார். மாலதியிடம் ரூபாய் 10 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும் வரதட்சணை கொடுக்காவிட்டால் மாலதியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த மாலதி, கணவனுடன் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். வரதட்சணை பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அந்தரங்கமாக இருந்தபோது எடுத்த மனைவியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் விஜயபாரதி பதிவு செய்ததாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த மாலதி, தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மாலதியின் உறவினர் ஸ்ரீதர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜயபாரதியை போலீசார் வலைவீசி தேடி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வரதட்சணை கொடுமை செய்ததையும், பேஸ்புக்கில் மாலதியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

மனைவியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் அவரது கணவரே பதிவு செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.