close
Choose your channels

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு: தட்டிக்கேட்ட அத்தையை கொலை செய்த சென்னை வாலிபர்

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த சென்னை வாலிபர் ஒருவரை அவருடைய அத்தை தட்டிக் கேட்டதை அடுத்து, அத்தையை அந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெயிண்டர் ஆக பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவு பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய அத்தை குணசுந்தரி, கணேஷிடம் தட்டி கேட்டதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து கணேஷ் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அத்தை குணசுந்தரியை குத்தினார்.

இதனால் குணசுந்தரி வலியால் துடித்த நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குணசுந்தரியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் மிதந்த குணசுந்தரி சம்பவ இடத்திலேயே சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். அப்போது கணேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கணேஷை தேடி வருகின்றனர். குணசுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தப்பியோடிய கணேஷை தேடி வருவதாகவும் கொளத்தூர் போலீசார் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.