close
Choose your channels

பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் தகராறு: சென்னை வாலிபரை உயிரோடு கொளுத்த முயற்சி

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை உயிரோடு கொளுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் தீக்காயத்துடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் தீபக் என்றும், சமையல் செய்யும்போது தீக்காயம் ஏற்பட்டதாக கூறினார்

ஆனால் போலீசார் அவருடைய வீட்டை சோதனை செய்த போது இரத்தம் படிந்த கத்தி மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து தீபக்கின் செல்போனை ஆய்வு செய்த போது அவரிடம் கடைசியாக பேசிய இரண்டு எண்கள் சென்னை மீனம்பாக்கம் டவரில் இருப்பது தெரியவந்தது

இதனையடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிசிடிவி காட்சியில் இருந்து பெற்ற இரண்டு சந்தேகத்துக்குரிய நபர்களின் அடையாளத்தை கூறினார்கள். அந்த நபர்களை அடையாளம் கண்டு மீனம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் பாலியல் தொழிலில் தீபக் உள்பட மூவர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது

வடமாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதில் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் தீபக்கை மற்ற இருவரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து தீபக்கிடம் மீண்டும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.