close
Choose your channels

கைதட்டியது தவறா? முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு

Monday, June 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரச்சனையின்றி, கருத்துவேறுபாடின்றி செல்லும் வரை சுவாரஸ்யம் இருக்காது. எப்போது மோதல் தொடங்குகிறதோ அப்போது முதல் டி.ஆர்.பி எகிறும். அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் இடையே ஒரு சின்ன பிணக்கு ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் பேசும்போது, 'இந்த உலகில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாட்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. அதனால் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது, எனவே இரண்டையும் சிக்கனாக பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார். இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டினர்.

இதனையடுத்து எழுந்த பாத்திமாபாபு, 'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு அவலநிலை. அது கைதட்டி வரவேற்க வேண்டியது கிடையாது' என்று கூறினார். அதற்கு பதிலளித்த சேரன், 'லிமிட்டேஷன் கொண்டு வந்ததற்காக கைதட்டுகிறோம்' என்று கூற அதற்கு பாத்திமாவின் முகம் சுருங்குகிறது. இதனையடுத்து இதுகுறித்து வாக்குவாதம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.