close
Choose your channels

மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்

Sunday, July 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி கடந்த சில நாட்களாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம், ஜெயப்பிரியா மரணம் ஆகியவை ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. இதுகுறித்த செய்திகள் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த செய்திகள் குறித்து நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் கூறியதாவது: ’ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ கற்பழிப்பு செய்திகள் அடுத்த செய்தி வெளிவரும் வரை மட்டுமே. அதன் பின்னர் செய்திகளும் மாறுகிறது, ஹேஷ்டேக்குகளும் மாறுகிறது. ஆனால் உண்மையில் மாறவேண்டியது மட்டும் ஒருபோதும் மாறாமல் இருப்பது பெரும் சோர்வை அளிக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி’ என்று குறிப்பிட்டுள்ளார்

பிரசன்னாவின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: ’மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு... எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.