கொரோனா முடிந்தவுடன் இவரை கட்டிப்பிடிப்பேன்: இயக்குனர் சேரன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இயந்திரம் போல் இயங்கி வந்த மனிதர்கள் தற்போது முழு ஓய்வில் உள்ளனர். இதுநாள் வரை பிடித்த வேலை என்பதை மறந்து, கிடைத்த வேலையை செய்து வந்தவர்களுக்கு இந்த கொரோனா விடுமுறை அவர்களுடைய உண்மையான திறமையை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஒரு ஓவியர் மாட்டின் மீது ஒரு மனிதரின் படத்தை வரைந்துள்ளார். சரியாக மாட்டின் கழுத்தில் மனிதனின் முகமும் மாட்டின் கால்களில் மனிதனின் கால்களையும் அவர் வரைந்துள்ளதால் மாடு நடக்கும்போது அந்த ஓவிய மனிதனும் நடப்பது போல் உள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இயக்குனர் சேரன், ‘மிகவும் ரசித்த வீடியோ.. இந்த கிரியேட்டர் எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு கொரோனா முடிஞ்சதும் ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்... என்ன கற்பனை ... என்ன யூகம்... அழகு... என்று புகழ்ந்துள்ளார். சேரன் பதிவு செய்த இந்த வீடியோவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும் ஒருசிலர் மாட்டின் மீது பெயிண்ட் அடித்து ஓவியம் வரைந்ததால் மாட்டுக்கு அலர்ஜி ஏற்படும் என்றும் ஓவிய திறமையை காண்பிக்க மாடு தான் கிடைத்ததா? என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

விசாகப்பட்டிணத்தில் நடந்தது என்ன??? விரிவான தொகுப்பு!!!

நேற்று, ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக்கசிவால் ஒரு சிறுமி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ராயபுரம், திருவிக நகரை முந்தியது கோடம்பாக்கம்: மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று வரை 5409 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 2644 பேர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ஒரே நாளில் 150 கோடி வசூல்: டாஸ்மார்க் செய்த உச்சகட்ட சாதனை 

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தால்  வேலையின்றி, வருமானம் இன்றி பொதுமக்கள் தவித்த நிலையில் அரசு அவர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதி

ஊரடங்கால் அதிக கர்ப்பம்: இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு என ஐநா தகவல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும், அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மே 4ஆம் தேதி முதல்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: தமிழக பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

கொரோனா வைரஸால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது ஆறுதலான செய்தியாக இருந்தது.