திரைப்படத்தில் கூறிய கருத்தை நிஜ வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரன்.. மகள் திருமணத்தில் ஆச்சரியம்,.!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

இயக்குனர் சேரன் தான் இயக்கிய ’திருமணம்’ என்ற திரைப்படத்தில் கூறிய கருத்துக்களை தனது மகள் திருமணத்தில் செய்து காட்டிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் சேரனுக்கு பிரியதர்ஷினி, தாமினி ஆகிய இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு இன்று சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுக்க, பாரதிராஜா, சீமான், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முன்னிலையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு ஆகும் பணத்தை கையில் கொடுத்து விடுங்கள், அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், திருமணத்தை எளிமையாக கோவிலில் நடத்துங்கள் என்று மகள் விரும்பி கேட்டதன் பெயரில் அந்த தொகையை சேரன் மகிழ்வுடன் தனது மகளுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேரன் இயக்கத்தில் உருவான ’திருமணம்’ என்ற திரைப்படத்தில் தனது வீட்டு திருமணத்தை மிக எளிமையாக நடத்தி திருமண செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை மணமக்கள் பெயரில் டெபாசிட் செய்து அதற்கான டாக்குமென்ட்களை கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தனது திரைப்படத்தில் என்ன கருத்து கூறியிருந்தாரோ அந்த கருத்து மற்றவர்களுக்கு என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பாக நடத்தி கொடுத்த அனைவருக்கும் தனது நன்றி என்று சேரன் தெரிவித்துள்ளார்.

More News

'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது? பாடலின் முதல் வரி இதுதானா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

சென்னை ஸ்டார் ஹோட்டலில் அஜித்-ஷாலினி கொண்டாட்டம்.. ஒரு வாரத்தில் இன்னொரு விசேஷம் இருக்குது..!

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அஜித் - ஷாலினி தங்களது 24 வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அக்கா திருமணத்தின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல

காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்திய விவகாரம்.. இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி..!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிறை மாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? சகிக்க முடியாமல் காதை பொத்தி கொண்ட அமலாபால்..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கணவரின் பாட்டு தொல்லை