நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த உலகத் தரத்திலான சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஒன்றுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. அந்த மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் படுத்திருந்த கட்டில் அளவிற்கு வெள்ள நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலக தரத்தில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலேயே இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இதுகுறித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் எந்தவித அதிருப்தியும் இல்லாமல் இருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இயக்குனர் சேரன் இது குறித்து ஆவேசமாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

எப்படிங்க இந்த மக்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையோட எதைப்பத்தியும் கவலை இல்லாம இருக்காங்கம்.. இவங்க மனசு முழுக்க நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா... என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் ஒன்று தமிழ்நாட்டில் நடந்தால் உடனே தெருவுக்கு வந்து நோயாளிகளும் உறவினர்களும் போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆனால் பீகாரில் கட்டில் அளவுக்கு வெள்ளநீர் வந்தபோதிலும் பொறுமையாக இருப்பதை நினைத்தே சேரன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்

More News

மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!

கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது.

த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார்.

கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஹரியாணா மாநிலத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கிடைக்காமல் விரக்தியில் சமையலறை கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்   

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது