கவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதலித்ததும், அந்த காதலுக்கு லாஸ்லியா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் கவின், லாஸ்லியா ஆகிய இருவருக்கும் சேரன் இதுகுறித்து பல்வேறு அறிவுரைகளை கூறி வந்தார். முதலில் கேமை முடித்துவிட்டு அதன்பின் வெளியே சென்றபின் இதுகுறித்து யோசித்து கொள்ளலாம் என்றும், இப்போதைக்கு கேமில் மட்டும் இருவரும் கவனம் செலுத்துமாறும் அவர் கூறினார். ஆனால் சேரனின் இந்த அறிவுரை கவினுக்கு மட்டுமின்றி அவரது ஆர்மியினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சேரனை கவின் ஆர்மியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இனிமேல் கவின் - லாஸ்லியா விவகாரத்தில் தான் தலையிடுவதில்லை என்றும் இருவரின் பெயர்களை கூட இனி உச்சரிப்பதில்லை என்றும் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

'கவின்- லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு, உங்களுக்குப் பிடித்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் எனக் கூறினேன். அது உங்களுக்குத் தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசிப் பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை. அவர் புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். கவின் - லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது.

இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரிகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம். நான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துகள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன். இதற்கு மேலும் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர (follow) வேண்டாம்.. மிக்க நன்றி'' என்று சேரன் தெரிவித்துள்ளார்

More News

டெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

விபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை!

கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் அறிமுகமாகி அதன் பின் 'தேவராட்டம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

விஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்

விஜய் நடித்த 'பிகில்' படத்தில் விஜய்க்கு நண்பர்களாக நடித்த ஜிமிக்கி, மணலி பிரபு, எஸ்தர் பிரபு ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து

'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஓப்பனிங் வசூலில்