படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம்: மதுரை மாணவி தற்கொலை குறித்து பிரபல இயக்குனர்!

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் ’எல்லோரும் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க. ஆனால் எனக்குத்தான் பயமா இருக்கு. இது என்னுடைய முடிவு. இதற்கு யாரும் காரணமல்ல. ஐ லவ் யு அம்மா, ஐ மிஸ் யூ அப்பா’ என கடிதம் எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என்று என்றும் தற்கொலை எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வல்ல என்றும் அவர்கள் தங்களுடைய டுவிட்டர் பகுதியில் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.

More News

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால்

கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும்

போதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்?

கன்னட திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரை உலகிலும் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி

வைகை புயலுக்கு வாழ்த்துக்கள்: இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

தமிழ் திரையுலக வரலாறு எழுதினால் அதில் வடிவேலுவை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு சினிமா நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு

முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே: வடிவேல் பாலாஜி குறித்து 'மாஸ்டர்' நடிகர் உருக்கம்!

முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே… என 'மாஸ்டர்' உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக தெரிவித்துள்ளார்