மோடி உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது… பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழக முதல்வர் பேச்சு!

தமிழகத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, திமுக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிவருகிறது. இதை திமுக தலைமை கண்டிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று வாகை சூடுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். உலக அரங்கிலே இந்தியா வல்லரசாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க உதவிய மோடி தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டிலுள்ள மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்வருகின்றனர்.

ஈரோடு மக்களின் பெரும் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தையும் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. காவிரி-கோதாவரி திட்டத்துககு பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார்” எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

More News

கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

இன்னொரு இனப்போருக்கு தயாரான மியான்மர்? இதுவரை 500 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு விவகாரத்திற்கு உலக நாடுகள் பலவும் இன்றுவரை குரல் எழுப்பி வருகின்றன.

ஆயிரம் விளக்கில் தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவின் பிரச்சார பாணியே வித்தியாசமாக இருப்பதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அசந்து போய் உள்ளனர்.

10கிமீ வேன் ஓட்டி வந்த நடிகை கவுதமி...! இதெல்லாம் பாஜக முருகனுக்காகவாம்...!

தாராபுரத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து, நடிகை கவுதமி 10கிமீ  வேன் ஓட்டி வந்து பிரச்சாரம் செய்தார்.

ஊடகங்களின் கருத்துகணிப்புகள் திரு. ரூபி மனோகரனின் வெற்றியை உறுதி செய்கிறது

தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்குநேரி தொகுதி வேட்பாளர் திரு.ரூபி மனோகரன்.