அக்கரையில் இருப்போரின் ஆதரவும் இபிஎஸ்க்கே… வேட்பாளர் தகுதியும் இவருக்கே… குதூகலிக்கும் தொண்டர்கள்!!!

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்த சர்ச்சை சில தினங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டமும் நடந்து முடிந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பு வரும் 7 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது. இத்தனை பரபரப்புக்கும் காரணம் கட்சிக்குள் நிலவும் சில முரண்பாடுகளே என விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் முதல்வரின் பலம் மேலும் அதிகரித்து இருப்பதாகக் கணிக்கப் படுகிறது. தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்குமுன் ஜெயலலிதாவின் மறைவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்து வந்தார்.

அதற்குப் பின்னர் திடீரென சில மாற்றங்கள் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் தனியாக பிரிந்து சென்று போராட்டம் நடத்தினார். அதன்பின்னர் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் பெயரில் மீண்டும் கட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்தார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையே இதுகுறித்து பெரிய போரே நடந்து வருகிறது. அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். கட்சியின் போக்கை கவனித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர்.

இதனால் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைவரின் ஒருமித்த முடிவாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தேர்ந்தெடுக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

More News

169 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிவறை… எதுக்கு இத்தனை காஸ்ட்லி தெரியுமா???

சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது.

மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அலட்சியத்தால் நடந்த சுவாரசியம்!!!

தேசப் பிதா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இந்தியாவில் விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது

விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் பலம், பலவீனம் என்ன? இயக்குனர் சேரன் 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கிய 'க/பெ ரணசிங்கம்'திரைப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸான நிலையில்

வெளிநாட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ தங்கம்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

மியான்மர் நாட்டில் இருந்து சாலை வழியாக அதுவும் சரக்கு வாகனத்தில் வைத்து மேற்கு வங்காளத்திற்கு

இந்தியாவில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை… இன்று பயன்பாட்டுக்கு வருகிறதா???

பனிக்காலங்களில் இமாச்சல் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் 6 மாதத்திற்கு தொடர்ந்து