close
Choose your channels

குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: சென்னையை மிஞ்சிய முக்கிய நகரம்

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் காவல்துறை இயக்குநர் ரவி அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த 3000 பேர் கொண்ட பட்டியலில் சென்னையை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது திருச்சியில் இருந்து விசாரணையை காவல் துறையினர் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

திருச்சியில் குழந்தைகளின் ஆபாசப்படம் பார்த்தவர்கள் 60 பேர் பட்டியலில் இருப்பதாக இணையதள முகவரிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த இணையதள முகவரிகளில் அடிக்கடி குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்க்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து அவர்கள் அனைவரிடமும் விசாரணையை காவல்துறையினர் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் தமிழகம் முழுவதும் 3 கும்பல்கள் இணையதளங்களில் ஆபாச படங்களை அப்லோடு செய்திருக்கும் விஷயத்தையும் போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை அடுத்து குழந்தைகள் ஆபாச படம் பார்த்த பலர் தங்களுடைய பெயரும் அந்த பட்டியலில் இருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.