close
Choose your channels

ஆறு கதை, ஆறு டெக்னீஷியன்கள்: வெங்கட்பிரபு-சிம்புதேவன் படத்தில் புதுமை

Monday, May 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'கசடதபற' என்பதுதான் இந்த படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்பட்டு இதற்கென ஒரு டைட்டில் போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் ஆறு கதைகளை தனித்தனியாக கொண்டது என்றும், ஆறு கதைகளிலும் தனித்தனி நடிகர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள், என பணிபுரியவுள்ளதாகவும், அவர்களில் ஆறு எடிட்டர்களின் பெயர்களை நாளை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஆறு கதைகளில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நான்கு கதைகளில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.