அதிபரை கோமாளி எனக் சொன்னவருக்கு நேர்ந்த கதி… கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்த சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,September 22 2020]

 

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை கோமாளி என விமர்சித்த அந்நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ரென் ஷிகியாங்கிற்கு எனப்படும் அத்தொழிலதிபர் மீது மேலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, லஞ்சம் வாங்கியது, ஊழல் வழக்கு என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 620,000 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் கொரோனா விஷயத்தில் கோமாளித்தனமாக நடந்து கொண்டார் என்று ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுதியிருந்தார் ரென் ஷிகியாங்க். அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் ஆக்கப்பட்டார். தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தானே ஒப்புக் கொண்டுள்ளார் எனக் கூறி 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

69 வயதாகும் ரென் ஷியாங் முன்னாள் அரசு அதிகாரியாக இருந்தவர். மேலும் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்வட்ட உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியில் இருந்தபோது 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான விசாரணை எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப் படவில்லை. ஆனால் ரென் ஷியாங் தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று மட்டும் பொதுவெளியில் கூறப்படுகிறது.

இத்தனை ஆத்திரம் ஏற்படுவதற்கு அப்படி என்ன சொன்னார் தெரியுமா ரென் ஷியாங், “இந்த தொற்றுநோய் காலத்தில் கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். மேலும அதிபரைச் சுட்டிக்காட்டி, அங்கு நிற்பது தன் புதிய ஆடைகளை காட்டும் ஒரு அரசாளர் அல்ல, அரசராக இருந்தாலும் உடைகள் பறிக்கப்பட்ட ஒரு கோமாளி அவர் என விமர்த்து இருந்தார்.  அவ்வளவுதான், 18 ஆண்டு சிறை தண்டனை… மற்றும் 62 மில்லியன் டாலர் அபராதம்…

More News

கொரோனாவால் இறந்த 87 வயது நபரின் உடலை எலி கடித்து குதறிய கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ரிக்சா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!

லண்டனில் பாலே டான்ஸ் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என ரிக்சா ஓட்டுநர் ஒருவரின் மகன் கனவை நனவாக்க பிரபல நடிகர் ஒருவர் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வெளி வந்திருக்கும்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆவணங்களை பட்டியலிட்டு ஐ.நா அவையையே தெறிக்கவிட்ட தமிழர்…

ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45 ஆவது கூட்டம் தொடங்கப்பட்டு,

'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு

எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக