மாஸ்க்கினால் உண்டான வடுக்கள்.. அசராமல் மக்கள் பணியாற்றும் சீன செவிலியர்கள்..! #Coronovirus

'கொரோனா வைரஸ்’ இந்தப் பெயர் சீனாவை மட்டுமல்ல உலக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன ஊடகங்கள் காரோண வைரசிலிருந்து மக்களை காக்க போராடும் செவிலியர்கள் மருத்துவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வுகான் நகரம் மருத்துவத் துறைக்குப் பெயர் போன நகரம். மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என நிரம்பியிருக்கும் இந்த மாகாணத்திலிருந்துதான் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது.

ஜனவரி மாதத்தில் இந்த நோய் மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு பின்னர்தான் உணர்ந்துகொண்டது. ஆனால், அதற்குள் கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. இது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ அதே கொரோனா வைரஸ் தாக்கத்தால் இரண்டு நாட்கள் முன்னர் மரணமடைந்தார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர். முகத்தில் அணிந்திருக்கும் 'மாஸ்க்’ செவிலியர்களுக்குக் கடுமையான வடுக்களை ஏற்படுத்துகின்றது. நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் இதுபோன்ற வடுக்கள் ஏற்படுகின்றன. அந்தக் காயத்துக்கு பிளாஸ்திரிகளைப் போட்டுக்கொண்டு மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்ந்து வருகின்றனர் செவிலியர்கள். இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.

More News

மும்மூர்த்திகள் அருள் புரியும் சுசீந்திரன் கோவில் – தொன்ம, வரலாற்று கதை

கன்னியாக்குமரி செல்பவர்கள் போகிற போக்கில் தலைக்காட்டி விட்டு வரலாம் என்ற விதத்திலாவது சுசீந்திரம் தாணுமலாயக் கோவிலைத் தரிசித்துவிட்டு வருவர்

பிகில் மட்டுமல்ல.. 2.0, தர்பார் படங்களுக்கும் தலா ரூ.100 கோடி பைனான்ஸ்.. யார் இந்த அன்புச்செழியன்?!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவே மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ளோம்..! அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். அதுவே எங்களின் கொள்கை. அதே நேரத்தில் தற்போதைய சூழலில் பல்வேறு விஷயங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.

SIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..!

இந்த கூகுள் மீனா, அலெக்ஸா, சிரி போன்று கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் தராமல் பயனாளருடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்!

இயக்குனர் சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு 2', 'கென்னடி கிளப்', மற்றும் 'சாம்பியன் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில்