நிலாவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி பூமிக்குக் கற்களைக் கொண்டுவரும் முயற்சி!!!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

 

நிலாவில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் மட்டும் தொடர்ந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாசா உறுதிப்படுத்தியது. இதற்கு முன்னதாகவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டாலும் அது உறைந்த பாறைகளில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நிலவின் தென்துருவப் பகுதியின் மேற்பரப்பிலேயே தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை நாசா உறுதிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சீனா தனது புது முயற்சியாக ஆளில்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கிருந்து கற்களை பூமிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டபோது சிறிதளவு பாறை மற்றும் மணலை அங்கு இருந்து கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதேபோல 1976 இல் ரஷ்யா ஆளில்லாத விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி 170 கிராம் அளவுள்ள பாறையைப் பூமிக்குக்கொண்டு வந்து ஆய்வை மேற்கொண்டது.

அந்த வரிசையில் தற்போது 3 ஆவதாக சீனாவும் ஒரு பெரிய ராக்கெட் மூலம் சேலஞ்-5 எனும் ஆளில்லா விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி அங்கிருந்து 2 கிலோ அளவுள்ள பாறைகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்கான ஏற்பாட்டில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலவின் ஓடிஷன் ஆப் ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து இந்தப் பாறைகளை சேகரித்து வர முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நிலவில் இயங்கும் எரிமலைகள் மற்றும் சூரியனில் வீசும் கதிர்வீச்சில் இருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

மாலத்தீவுக்கு நீங்களும் போயிட்டீங்களா? சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள் 

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ்,

லம்பாடி இனத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர்… குவியும் பாராட்டு!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் படிப்பு மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.

தகாத உறவை மறைக்க ரூ.12 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்… இளவரசியின் குட்டு அம்பலம்!!!

துபாய் இளவரசியான ஹயா தனது மெய்க்காப்பாளர்களுள் ஒருவரான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்லாது பல விலையுயர்ந்த பொருட்களை பரிசாகக் கொடுத்துள்ளார்

போதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்!

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் இடையே போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி

குஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி?

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.