கொரோனாவிற்கு மருந்து..! பழைய முறையில் புது முயற்சி எடுக்கும் சீனா.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது கிட்டத்தட்ட 180 நாடுகளில் உள்ள மக்களின் அன்றாட பணிகளை முடக்கியுள்ளது.பல நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

சீனாவனது மனித இரத்த பிளாஸ்மாவை பிரித்தெடுத்து மருந்து கண்டுபிடிக்கும் முறையை தொடங்கியுள்ளது. இது ஒரு பழமையான முறையாகும். ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமான மனிதர்களின் இரத்த பிளாஸ்மாவில் வைரசை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடிகள் காணப்படும். அதைக் கொண்டு மருந்தினை தயாரிக்கலாம். இது வெற்றி தரக்கூடிய ஒரு வழிதான்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்களும் இதே முறையை பின்பற்ற அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் நமக்கு சீக்கிரம் கொரோனா வைரஸினை எதிர்க்கும் ஒரு மருந்து கிடைக்கும். ஆனால் இந்த ஆராய்ச்சியானது கொரோனா வைரஸினை எதிர்த்து செயல்படுமா என்பது ஆராய்ச்சி முடிவிலேயே தெரியும். ஏனென்றால் இது மனித குலத்திற்கு மிக புதுமையான ஒரு வைரஸ்.

More News

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிரடி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில்

ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் மக்கள் பணியில் துப்புரவு தோழர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா  வைரசால் பலியாகி வரும் நிலையில்

தமிழ் நடிகர் டாக்டர் சேதுராமன் உயிரிழந்தார்: சந்தானம் அதிர்ச்சி

தமிழ் நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

வீட்டில் இருந்தால் மட்டும் தீர்வாகாது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை பொறுமையுடன் கடைப்பிடித்து,