பொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்!  பரபரப்பு சம்பவம்!

கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் பல மாதங்களைக் கடந்து மீண்டும் சில நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. காரணம் அங்கு மீண்டும் சில மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி இருக்கிறது. இதனால் ஹுபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மக்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.

இப்படி இருக்கும்போது ஹுபேயில் இருந்து ஒரு விற்பனையாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜிலின் மாகாணத்திற்கு சென்று இருக்கிறார். அவர் ஜிலினில் உள்ள பல இடங்களுக்குச் சென்று அங்கு நூற்றுக் கணக்கானோரை சந்தித்து தன்னுடைய நிறுவனப் பொருட்களைக் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இதனால் ஜிலின் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களில் 109 பேருக்கு அறிகுறியே இல்லாத கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸின் தொடர்பை குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த விற்பனையாளருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் தற்போது ஜிலின் உள்ள 2 நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்நகரில் உள்ள 1 கோடியே 25 லட்சம் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நகரங்களைத் தவிர சீனாவில் மேலும் 1 கோடியே 90 லட்சம் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி!

புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் சமூக சேவகியுமான டாக்டர் சாந்தா அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93

சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

சீனாவின் ஷாண்டோய் மாகாணத்தில் உள்ள யான்டாய் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி கொண்டு தேர்தல் பிரசாரமும் செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்

மேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

விழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்!

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருந்த மராட்டிய மூத்த கவிஞர் ஒருவர் விழா மேடையில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு இருந்ததால் விருதையே வேண்டாம் என உதறி இருக்கிறார்.