முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் முதல் முறையாக தனது குழந்தைகளின் முகத்தை காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியான சின்மயி தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் இவர் சமந்தா உட்பட பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட சின்மயிக்கு கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இந்த நிலையில் நேற்று சின்மயி குழந்தைகளின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை குழந்தையின் முகத்தை காட்டாமல் பல புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த புகைப்படத்தில் குழந்தையின் முழுமையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

த்ரிஷா, ஹன்சிகாவுக்கு வைத்த பெயரை நயன்தாராவுக்கு வைத்த இயக்குனர்.. சுவாரஸ்ய தகவல்..!

பிரபல இயக்குனர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தனது முந்தைய பட ஹீரோயின்கள் த்ரிஷா மற்றும் ஹன்சிகாவுக்கு வைத்த பெயரை நயன்தாராவின் கேரக்டருக்கும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது 'இந்தியன் 2' படப்பிடிப்பு: ரிலீஸ் குறித்த மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைக்கலாமா? மருத்துவம் சொல்வது என்ன?

பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் சரியாக இருக்குமா? ஒருவேளை அந்த காலக்கட்டங்களில் உடலுறவு வைத்துக் கொண்டால் பாலியல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா?

பாடிக் கொண்டிருந்த போதே சரிந்து, உயிரிழந்த பிரபல பாடகர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஒருவர் தன்னுடைய ரசிகர்களுக்கு முன்னிலையில் பாடிக் கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம்

பெரும் தொகையில் பண மோசடியா? மேனேஜரை நீக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தனா திடீரென்று தன்னுடைய நீண்டநாள் மேலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும்