தடைக்கு பின் சமந்தாவுக்காக முதல்முறையாக குரல் கொடுக்கும் சின்மயி!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் அவர் திடீரென டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் நீதிமன்றம் சென்ற சின்மயிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் மீண்டும் டப்பிங் யூனியனில் அவர் இணைத்து கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில் தடைக்கு பின் மீண்டும் டப்பிங் யூனியனில் இணைந்த சின்மயி, டப்பிங் செய்த முதல் படம் சமந்தாவின் 'ஓ பேபி'. இந்த படம் தெலுங்கில் உருவாகியுள்ள நிலையில் தற்போது இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமந்தாவுக்கு பின்னணி குரல் கொடுக்கின்றார் சின்மயி. சின்மயி குரலுடன் 'ஓ பேபி' படத்தின் தமிழ் டீசரும் தற்போது வெளிவந்துள்ளது

சமந்தா, லட்சுமி, ஊர்வசி, ராவ் ரமேஷ், ஐஸ்வர்யா, நாகசெளரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். மிக்கி ஜே.மேயர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது