close
Choose your channels

'மீடூ' விவகாரத்தில் எத்தனை ஆண்கள் குரல் கொடுத்தீர்கள்: சின்மயி கேள்வி

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மீடூ விவகாரத்தில் பெண்கள் ஆதரவு கொடுத்தது போல் ஆண்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, பெண்களை கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஆண்களில் எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டவரை கேள்வி கேட்டீர்கள்' என்றும் பாடகி சின்மயி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதுதான் விஷால் அவர்கள் மூன்று நபர் கமிட்டி இதற்காக அமைக்கவிருப்பதாக கூறியுள்ளார். அந்த கமிட்டியில் இருப்பவர்கள் யார்? அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும் என்று சின்மயி கூறினார். மேலும் தன்னுடைய திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தது ஏன் என்ற கேள்விக்கு தான் பலமுறை பதிலளித்துவிட்டதாகவும் இருப்பினும் இன்னொரு முறை கூறுவதாக கூறிய சின்மயி, தன்னுடைய தாயாரின் உடல்நிலை காரணமாக தன்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடக்காமல் வேறொரு நாளில் நடந்ததாகவும், தன்னால் நேரில் சென்று ஒருசிலரை அழைக்க முடியாததால் பி.ஆர்.ஓ மூலமே பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் வைரமுத்து என்றும் கூறினார்

மேலும் வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது எனக்கு மட்டுமின்றி என்னை சேர்ந்த பெண்கள் எல்லோருக்கும் தெரியும் என்றும், உங்களை போன்ற ஆண்களுக்குத்தான் அவரை பற்றி தெரியாது என்றும் சின்மயி கூறினார். இதனால் பத்திரிகையாளர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.