close
Choose your channels

டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஒய்,.ஜி. மகேந்திரன் கூறியபோது ‘விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவும் பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறினார்

ஒய்.ஜி.மகேந்திரன் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் இதுகுறித்து சின்மயி கூறியபோது ’பொதுவாக இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் நாம் கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும் என்றும் இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது என்றும் அவ்வாறு முயற்சித்தால் அது காலவிரயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சின்மயியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களின் ஆதரவு குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.