close
Choose your channels

நீயெல்லாம் என் ரசிகன்னு சொன்னா எனக்குத்தான் அவமானம்: சொன்னது யார் தெரியுமா?

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் சமூகவலைதளத்தில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் டுவிட்டர் இணையதளம் பெரும் பரபரப்பில் உள்ளது.

அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் ஆபாச வார்த்தைகள் பதிவு செய்யப்படுவதும் அதற்கு கஸ்தூரி பதிலடி கொடுப்பதும், ஒரு கட்டத்தில் அஜித் மற்றும் ஷாலினி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும், அஜித் தனது ரசிகர்களை கட்டுப்படுத்த அறிவுரை கூற வேண்டும் என்று கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தற்போது திடீரென பாடகி சின்மயி தலையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’மோசமான பதிவுகள் செய்யப்படுவதை டுவிட்டர் இந்தியா உட்பட யாரும் இங்கே தட்டி கேட்க மாட்டார்கள். எனவே நீங்கள் உடனடியாக காவல்துறையில் புகார் மனு கொடுங்கள். அவர்கள்தான் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவார்கள், இங்கே கற்பழிப்பு மிரட்டல் விடுத்தால் கூட யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்று கஸ்தூரிக்கு சின்மயி அட்வைஸ் கூறி உள்ளார்.

இதற்கு ஒரு ரசிகர் கூறியிருப்பதாவது: நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் மாற்று கருத்து இல்லை ஆனால் தனிப்பட்ட நபரின் தவறுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒருத்தரை தாக்குவது தவறு. பெண்களை இழிவாக பேசுவது தவறு வன்மையாக கண்டிக்கிறோம், அனைவரும் உங்கள் குரலின் ரசிகை தான் ஆனால் நீங்கள் செய்வது அனைத்தும் சரி அல்ல என்று.

இந்த ரசிகருக்கு பதில் கூறியுள்ள பாடகி சின்மயி ’உங்களை மாதிரி ஆம்பள எல்லாம் நான் உத்தமியா? இல்லையான்னு சொல்ல தகுதி இருக்கான்னு எவருக்கு தெரியும். உங்களைப்போல அழுகிய வார்த்தைகள் யூஸ் பண்ற ஆட்கள் எல்லாம் என் குரலுக்கு ரசிகன் சொன்னால் எனக்குத்தான் அவமானம்’ என்று கூறியுள்ளார் சின்மயியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.