சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: பரபரப்பு செய்தி

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொழில்முறை காரணமாக மும்பை சென்றிருந்த நடிகர் சிரஞ்சீவி, மீண்டும் ஐதராபாத் திரும்புவதற்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். விமானம் ஐதராபாத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களில் ஒருவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று விமானத்தில் அனைவரும் ஐதராபாத் திரும்பினர். தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள 'சயிர நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அக்டோபரில் விஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீஸ்?

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடும் போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த ரம்யா கிருஷ்ணன்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த வாரம் கிராமத்துப்புற கலைகளால் சண்டை சச்சரவு இன்றி ஹவுஸ்மேட்ஸ்கள் போட்டியையும் மறந்து, மறந்த போன கலையை நினைவுபடுத்தினர்.

விஜய் அரசியலுக்கு வந்தால்..? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் தான் ஆதரிப்பேன் என்றும்

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கவுதம் மேனன் தகவல்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் எப்போது வெளிவரும்

தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினியிடம் விசாரணையா?

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகிய நிலையில் இந்த சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன்