close
Choose your channels

நயன்தாரா மீதான சிரஞ்சீவியின் குற்றச்சாட்டு சரியா?

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா நடித்த ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நயன்தாராவை சிரஞ்சீவி மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இந்த படத்தின் இன்னொரு நாயகியான தமன்னா அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட நிலையில் சிரஞ்சீவி இதுகுறித்து கூறியபோது, ‘இந்த படத்தில் நடித்த மற்றொரு ஹீரோயின் புரமோஷன்களுக்கு வரமுடியாது என்று கூறிவிட்ட நிலையில் இப்படத்தின் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் தமன்னா கலந்து கொண்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவினார். தமன்னா கமர்ஷியில் நடிகை மட்டுமல்ல, அதையும் தாண்டி நடிப்பு திறமை மிகுந்தவர் என்பதை சைரா படத்தில் நிரூபித்திருந்தார். அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு அவர்தான் உதாரணமாக இருக்கிறார்’ என்று கூறினார்.

ஒரு படத்தில் ஒப்பந்தமாகும்போதே அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தான் நயன்தாரா கையெழுத்திடுகிறார். அதற்கு ஒப்புக்கொண்டுதான் நயன்தாராவை அனைவரும் ஒப்பந்தம் செய்கின்றனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.