சிரஞ்சீவி பத்திரிகையாளரிடம் பேசிய ஆடியோ லீக்காகி வைரல்: அப்படி என்ன தான் பேசினார்?

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

என்ன நல்லது செய்தாலும் ஊடகத்தினர் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வேதனையுடன் கூறிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா முதல் அலையின் போதும் சரி இரண்டாவது அலையின் போதும் சரி தனது சொந்த பணத்தில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. குறிப்பாக இந்த இரண்டாவது அலையின் போது அவர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஆக்சிஜன் வங்கி ஒன்றையும் தொடங்கினார் என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கிட்டத்தட்ட இந்த இரண்டாவது அலையில் மட்டும் ரூ.30 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அவர் செய்யும் உதவிகள் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதாகவும் ஆனால் ஒரே ஒரு பத்திரிகை மட்டும் அது குறித்த செய்திகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து அவர் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது. இந்தத் தொலைபேசி உரையாடலின் ஆடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அரசியல் காரணங்களுக்காக தான் செய்யும் நல உதவிகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்று தனது மனவேதனையை கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

கொரோனா கொடூரம்....! நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்...!

சேலம் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால், நோயாளிகளுக்கு தரையில் படுக்கவைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது

நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள்: எடிட்டர் சுரேஷ் டுவிட்

'தமிழ்ப்படம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராக அறிமுகமான எடிட்டர் சுரேஷ் அதன்பின்னர் 'தூங்காநகரம்' 'வணக்கம் சென்னை' 'மாயா' உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார்.

நெல்லை மண்ணில் ஜூன் மாதத்தை வித்தியாசமாக வரவேற்ற கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் தந்தை மகளாக அருண்பாண்டியன் - கீர்த்தி பாண்டியன்

லிங்குசாமி ஹீரோவை வளைத்து போட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் நடிக்கும் ஹீரோ ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

உங்க கையில்தான் இருக்கு… தமிழக மக்களுக்கு முதல்வர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில், கொரோனா ஊரடங்கை நீடித்துக் கொண்டே போகமுடியாது.