'அம்மா' என்று சொல்லி கொடுத்தால் 'அப்பா' என்று சொல்லும் சிரஞ்சீவி சார்ஜா மகன்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,June 15 2022]

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மகன் தற்போது வளர்ந்து வரும் நிலையில் அவருக்கு அவருடைய அம்மா மேக்னாராஜ் 'அம்மா’ என்று சொல்லிக் கொடுத்த நிலையில் அவரது மகன் ‘அப்பா’ என்று கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் போது அவரது மனைவி மேக்னாராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதும் அதன்பின் அவருக்கு பிறந்த குழந்தைக்கு ராயான்ராஜ் என்ற பெயர் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மேக்னா ராஜின் மகன் ராயான் ராஜ் 2 வயதை எட்டியுள்ள நிலையில் அவருக்கு 'அம்மா’ என்று மேக்னாராஜ் சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்லிக்கொடுத்தது போலவே 'அம்மா’ என்று சொல்லிக்கொண்டே வந்த அவரது மகன் திடீரென ஒரு கட்டத்தில் ‘அப்பா’ என்று கூறியதோடு, சிரஞ்சீவி சார்ஜா போலவே மேனரிசமும் செய்கிறார். இது குறித்த வீடியோவை மேக்னாராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.