சித்ராவை தினமும் மிரட்டியது அரசியல்வாதியா? ஆங்கரா? சென்னை கமிஷனரிடம் மாமனார் புகார்

  • IndiaGlitz, [Sunday,December 20 2020]

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தாலும், அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்ரா தற்கொலை வழக்கில் ஏற்கனவே அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் போலீஸ் விசாரணையில் சித்ராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாகவும், அரசியல்வாதிகளின் தொடர்பும் இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:

தற்போதுதான் எனக்கு பல சமூகவலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் மூலம் சித்ரா, ஏற்கனவே 3 ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் நெருக்கமான படத்தை வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டியதாகவும், அரசியல்வாதிகள் தினமும் தொலைபேசியில் பேசியதாகவும் தொடர்ந்து செய்தி வந்துகொண்டுள்ளது.

ஒரு சில தொலைபேசி எண்கள் வந்தால் சித்ரா பதற்றத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே அதன் அடிப்படையில், சித்ராவை மிரட்டிய நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்ராவின் தாயாருக்கு கூட உண்மை நிலவரம் தெரிந்தும், அவர் மிரட்டல் விடுத்த நபர்களுக்கு பயந்து அமைதி காத்து வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரையில் சித்ரா மரணத்தில் உண்மை வெளியே வரவேண்டும்.

சித்ரா மாமனாரின் இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது