close
Choose your channels

என் மகளை அவர் தான் கொன்றுவிட்டான், அவரை நானே கொல்வேன்: சித்ரா தாய் ஆவேசம்

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன் சித்ராவின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து சித்ராவின் கோட்டூர்புரம் வீட்டிற்கு தற்போது அவரது உடலை கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை பெற்றுக் கொண்ட சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தபோது ’எனது மகளை அவரது கணவர் தான் அடித்து சாகடித்த விட்டார். என் மகள் கோழை அல்ல. யாருக்காவது தற்கொலை இருந்தால் அந்த எண்ணத்தை எனது மகள் மாற்றுவார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

சித்ராவுக்கு பதிவு திருமணம் நடந்தது உண்மைதான். பதிவு திருமணத்தில் 6 பேர் மட்டும் கலந்து கொண்டோம். ஹேமந்தை நம்பி நான் சித்ராவை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் சாகடித்து விட்டார். அவரை நானே கொன்றுவிடுவேன். முல்லை ரசிகர்கள் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் ’எனது மகளை அவரது கணவன் கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் அளிப்பேன்’ என்று கூறிய சித்ராவின் தாயார், ’வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தான் என் மகளுக்கு ஊரறிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

சித்ரா தாயாரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.