close
Choose your channels

ஜெயலலிதா மரணத்தை அறியாமலேயே உயிர்விட்ட சோ

Wednesday, December 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், பத்திரிகையாளருமான சோ அவர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன் தினம் மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தை அறியாமலேயே சோ உயிர் விட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகவே சோ அவர்களின் உடல் கவலைக்கிடமாக இருந்ததால் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தேறிய பின்னர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெரிவித்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில் திடீரென இன்று காலை அவர் மரணம் அடைந்துள்ளார். எனவே தனது உயிர்த்தோழியின் மரணம் குறித்து அறியாமலேயே சோ அவர்கள் மரணம் அடைந்துள்ளார்.

வாழும்போது நட்புக்கு இலக்கணமாக இருந்த ஜெயலலிதா-சோ ஆகியோர் பண்டைக்கால நண்பர்கள் கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் போல் மரணத்திலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.