ஐபிஎல்-இல் அதிகச் சம்பளம் வாங்கிய முன்னணி வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான கிறிஸ் மோரிஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டாக விளையாடி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய கிறிஸ் இதுவரை 8 வருடங்களில் 69 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் 774 ரன்களை குவித்த அவர் 94 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கிறிஸ் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தகவல் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் பல அணிகள் இவரை ஏலத்தில் எடுப்பதற்காகப் போட்டிப்போட்டன. இறுதியாக ராஜஸ்தான் அணி இவரை 16.5 கோடிக்கு ஏலம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த வருடமும் அதிக ஏலத்திற்கு எடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 81 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிய கிறிஸ் மோரிஸ் 618 ரன்களைக் குவித்து 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் போது 11 போட்டிகளில் இவர் 15 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

தற்போது திடீர் ஓய்வை அறிவித்துள்ள கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உள்ளூர் அணியான டைட்டானிஸ் அணிக்கு பௌலிங் கோச்சாக பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவ உலகில் புது திருப்பம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின்

எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வொர்க்-அவுட் சமந்தா: வேற லெவல் வீடியோ வைரல்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பிஸியான நடிகை என்றாலும், இந்த பிஸியான நேரத்திலும் அவர் உடற்பயிற்சி செய்வதில் தவறுவதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜூ, பிரியங்காவை தொடர்ந்து 3வது இடத்திற்கு முந்தும் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்கள் என்பதும் இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக வரும்

39 வயதிலும் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் 39 வயதிலும் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது