close
Choose your channels

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: எங்கே இருந்தார் தெரியுமா?

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் ஸ்டண்ட் மாஸ்டர் களில் ஒருவரான கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனல்கண்ணன் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் புதுச்சேரியில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றினால்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசினார் என்பதும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.