கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்த குமாரவேல் சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் நடத்தி வந்த வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அதே நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை கோவை சரளா மற்றும் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர்களுடன் குமாரவேலுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலக கமல்ஹாசனிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசன் தரப்பு அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குமாரமேல், கடலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென அவர் பதவி விலகியுள்ளது அக்கட்சியினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

'மிஸ்டர் லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

எங்களின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின்: முன்னாள் மத்திய அமைச்சர் டுவீட்

பாராளுமன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய அறிவிப்பு

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

தேர்தல் 2019: அதிமுக-திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகள் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றன.