நிவாரணத் தொகையை உயர்த்தி விவசாயிகளை குஷிப்படுத்திய தமிழக முதல்வர்… குவியும் பாராட்டு!!!

 

தமிழகத்தில் நிவர், புரெவி போன்ற புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் இடுபொருள் நிவாரணத் தொகையை ரூ.600 கோடியாக உயர்த்தி உள்ளார். இதனால் தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகள் வங்கி கணக்கில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் நேரடியாக நிவாரணம் வரைவு வைக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட 3.10 லட்சம் நிலங்களுக்காக ரூ.5,264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது. பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் இடுபொருள் வழங்க உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. 2 ஏக்கர் என்ற உச்ச வரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கு நிவாரணம் தர ஆணையிடப்பட்டு உள்ளது.

மேலும் “மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணத் தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மானாவாரி நெல் தவிர பிற பயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தரப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.

More News

பேஷன் பட பீஜியமிற்கு பூனை நடை… இளம் நடிகையின் அசத்தல் வீடியோ!!!

பாலிவுட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் fashion. இந்தப் படத்தின் பீஜியம் அனைவராலும் விருப்பப்பட்டது.

கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி எப்போது??? வெளியான முக்கிய அறிவிப்பு !!!

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகக் கோயில்களில் கடந்த மார்ச் 24 முதல் வழக்கமான பூஜை மற்றும் திருவிழாக்கள் இல்லாமல் இருக்கிறது.

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நடிகர் சிம்பு கோரிக்கை வைத்திருந்தார்.

ரம்யாவை அடுத்து ரியோவுக்கும் பயத்தை காட்டிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த ஆரி, நான்காவது வாரம் முதல் 'இந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைக்க போகிறேன்'

உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? காமெடி நடிகர் மகனை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது நடிகர் சாம்ஸ் மகன் யோஹான் சினிமாவில் அறிமுகமாக தயாராகி வருகிறார்