close
Choose your channels

தைரியம் இல்லாதவர் அவர்… மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக முதல்வர் ஆவேசம்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஐபிக்கள் அதிமுள்ள சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் எம்.கே.மோகனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான கோகுல இந்திராவும் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் கோகுல இந்திராவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மு.க.ஸ்டாலினை குறித்து காட்டமாகக் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் கடந்த ஜனவரியில் இருந்தே சொல்லி வருகிறேன். அதிமுக அரசாங்கத்தின் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை விவாதத்தில் தெரிவியுங்கள். இதற்கு நான் உறுதியாகப் பதில் சொல்கிறேன்.

ஒரே மேடையில் இருந்து உங்களைக் குற்றச்சாட்டுகளை கூறினால் அதற்கு எளிதாக பதில் காண முடியும். அதேபோல சென்ற ஆட்சியின் குற்றச் சாட்டுகளையும் என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இத்தகைய விவாதத்திற்கு நானும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறேன். ஆனால் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வருகிறார். அவருக்கு தைரியம் இல்லை எனவும் காட்டமாகப் பிரச்சாரத்தின் போது கருத்துக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.