டீக்கடையில் அமர்ந்து சிறுவனிடம் உரையாடிய முதல்வர்… வைரலாகும் புகைப்படம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு நடுவே ஒரு டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அவர் அங்கிருந்த ஒரு சிறுவனிடம் ஆன்லைன் வகுப்பு குறித்து கேட்டிறிந்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிப்பணி, அரசுப் பணி என பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து வொர்க்அவுட், உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் இன்று காலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அவர் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது கோவளம் அருகே டீக்கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர் அங்கிருந்த சிறுவனிடம் எந்த பள்ளியில் படிக்கிறாய்? எந்த வகுப்பு? ஆன்லைன் வகுப்பில் பள்ளிப்பாடங்கள் புரிகிறதா? எனக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த அந்தச் சிறுவன் கோவளத்தில் இருக்கும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். ஆன்லைன் வகுப்புகள் தனக்கு புரிகிறது எனப் பதிலளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.

More News

'வலிமை' தள்ளிப்போனதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் ஆறு திரைப்படங்கள்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

ஸ்மார்ட் போன் மேஜிக்… பேசாமலேயே உலகப் பிரபலமான டிக்டாக் கலைஞன் கேபி லேம்!

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில்

ஷங்கரின் மகள் அதிதி ஒரு மருத்துவரா? இணையத்தைக் கலக்கும் தகவல்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்

எதிர்பாராத திருப்பம்: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது இவரா? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் நாளை குறைந்த வாக்குகளின்

இந்த வார பிக்பாஸ் எவிக்சன்: இந்த இருவரில் ஒரு போட்டியாளரா?

பிக்பாஸ் சீசன் 5 முடிவு பெற இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் 7 போட்டியாளர்களில் 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறி விட்டார் என்பதும்,