டாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....! ஸ்டாலின் கூறிய பதில்....!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இதற்காகத் தான் திறக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் கூறியுள்ளார்.

வரும் ஜூன்-14-ஆம் தேதிக்கு பின்பு மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பாதிப்பு அதிகமுள்ள குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுத்தான் இந்த தளர்வுகள் உள்ளடங்கும். அந்தவகையில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், அரசு பூங்காக்கள் உள்ளிட்டவை, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்கும். இதனுடன் மதுபானக் கடைகள் இயங்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.


மதுபானக் கடைகள் செயல்பட அரசு அனுமதித்த நிலையில், இச்செய்தி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் திறக்கக்கூடாது என தனது வீட்டு வாசலில் கருப்பு உடை அணிந்து  போராட்டம் நடத்தினார் ஸ்டாலின். ஆனால் அவரே முதல்வரான பின், கொரோனா காலத்தில்  இக்கடைகளை திறக்க அனுமதிப்பதா...? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல விமர்சனங்களுக்கு இடையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது, மேற்கு மண்டலங்களில் டாஸ்மாக்-கை திறக்க அனுமதிக்கவில்லை. கொரோனா தொற்று குறைந்த குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கடையை திறக்க அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

டீ கடைகள் திறக்க அனுமதிக்காத அரசு, டாஸ்மாக்-க்கு அனுமதியளித்துள்ளதால்,  இதற்கான அவசியம் தற்போது தேவையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புக்கு சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்!

நடிகர் தனுஷை “மும்பையில் வீடு வாங்க நான் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை“ என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஆன்ந்த் எல் ராய் அளித்த பேட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.

பேமிலி மேன்-2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் இவ்வளவா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்...!

தி பேமிலி மேன்-2 என்ற வெப்சீரியஸ், தமிழ் இனத்திற்கு எதிரான பல கருத்துக்களை கூறியிருப்பதால்,