close
Choose your channels

எதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்றும் அதிமுக ஒருபோதும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடாது என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல எதிர்க்கட்சி தன்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன், நான் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவன் தான், அதை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தில் ஈடுபடுவது நியாயமில்லை என்றும் கூறி இருந்தார்.

மேலும், கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில் பேசிய தமிழக முதல்வர், 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெறப் போகிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் பேசி இருந்தார். அதன் பிறகு 200 தொகுதி என்று சொல்கிறார். இரண்டே நாளில் 34 தொகுதியை அவரே இழந்து விட்டார். அவர்களுக்கு மொத்தம் 34 தொகுதி தான் கிடைக்கும். அதுக்கூட இல்லாமலும் போகலாம். எதிர்க்கட்சி அடிப்படையில் ஒரு குடும்பக் கட்சி என்றும் விமர்சனம் செய்தார்.

அதோடு நாட்டு மக்களுக்காக எதிர்க்கட்சி என்ன செய்தது? அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. அது கட்சியாகத் தெரியவில்லை. அந்தக் கட்சிக்கு ஷேர்மனாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இவர் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர்களை கழித்துவிட்டு பார்த்தால் அதில் வேறு ஒன்றும் தெரியவில்லை என்று அதிரடியாக பேசி இருந்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் கட்சிக்குள் நுழைந்து தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு பிறகு இவரது மகன் கட்சிக்குள் தலையெடுத்து செயலாற்றி வருகிறார். இப்படித்தான் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. இதைக் குடும்பக் கட்சி என்று சொல்வதில் தவறில்லை என்றும் அதிரடியாக விமர்சித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுகவும் அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.