முதல்வரை நடிகர் அர்ஜூன் சந்தித்தது இதற்குத்தானா?

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார் என்றும் இதுவொரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் முதல்வரை அர்ஜுன் சந்திக்கும்போது முதல்வர் மனைவியும் உடன் இருந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி நடிகர் அர்ஜுன் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவிலை கட்டி உள்ளார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்து தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும்படி அழைப்பு விடுக்கவே நடிகர் அர்ஜுன் முதல்வரை சந்தித்து இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த கோவில் குறித்து நடிகர் அர்ஜூன் கூறியதாவது:

நடிகர் அர்ஜுன் கூறுகையில் “ இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது.



இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த
ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர்
சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.



இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

இந்த கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று அர்ஜுன் கூறினார்.

More News

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்கும் இந்தியக் கிரிக்கெட் பிரபலம்!

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நம்மில் பலருக்கு அக்கவுண்டே இருக்காது. இந்நிலையில் சில பிரபலங்கள்  ஒரு போஸ்ட்டுக்கு கோடிக் கணக்கில் தொகை வாங்குகிறார்கள்

விஜய் டிவியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற யார் காரணம்?

நடிகை வனிதா விஜயகுமார் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!

'இந்தியன் 2' விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான லைகாவின் மனுக்கள் தள்ளுபடி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த 'இந்தியன் 2' படம் குறித்த வழக்கில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

சட்டம் சுதந்திரத்தை காப்பதற்காகவே, குரல்வளையை நெறிக்க அல்ல: சூர்யா

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.