சென்னை மெட்ரோவில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சென்ட்ரல் எதிரே பயணிகளுக்கு வசதியாக பல்வேறு கட்டுமான பணிகள் மெட்ரோ ரயில் நிலையம் சார்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மெட்ரோ ரயிலில் அவர் பயணித்து மேலும் சில மெட்ரோ ரயில் நிலையப் பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்துக்கு மிக நெருக்கடியாக இருக்கும் சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்ட்ரல் பிளாசா (மத்தியச் சதுக்கம்) எனும் பெயரில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தப் பகுதியில் பல்வேறு வழித்தடங்களில் செல்ல வேண்டிய பாதசாரிகளை இணைக்கும் வண்ணம் மிகப்பெரிய கட்டுமானப் பணி 400 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.

31 தளங்களைக் கொண்டு அமையவுள்ள இந்த சென்ட்ரல் பிளாசாவில் 300 நான்கு சக்கர வாகனங்கள், 1,500 இருசக்கர வாகனங்கள் நிற்பதற்கு ஏற்ப வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகம், தொழில் நிறுவனங்களின் அலுவலகம் போன்றவை அமைவதற்கு ஏற்ப கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஏஜிடிம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கத்திப்பாராவில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

மார்டன் டிரெண்டில் நடிகை பிரியாமணி… ரசிகர்களை ஈர்த்த புகைப்படம்!

தான் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகை பிரியாமணி.

அழகான சிவப்பு நிற லெகங்காவில் துர்க்கையை பிரதிபலிக்கும் டிடி!

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம்வருவபர் டிடி.

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற தமிழ் நடிகை!

ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசாவை பெறுவது ஒரு கவுரவம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த விசாவை இந்தியாவைச் சேர்ந்த பல திரையுலக நட்சத்திரங்கள் வாங்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2- அப்டேட் கிடைத்தும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம்

அழுகை வரலை, கோபம் தான் வந்துச்சு: கணவர் மறைவு குறித்து கண்ணீருடன் பவானி ரெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள், சந்தித்த சவால்கள் ஆகியவற்றை கண்ணீருடன் கூறி வருகின்றனர்