பைக்கை திருடி சொந்த ஊருக்கு சென்றவுடன் பைக்கை கொரியரில் அனுப்பிய நபர்

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

கோவையில் உள்ள ஒரு நபர் பைக்கை திருடி, தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்ற பின், பைக்கை அதன் உரிமையாளருக்கு கொரியரில் அனுப்பி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவையை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பைக் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கோவையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் பேருந்து ரயில் என எந்தவித போக்குவரத்தும் இல்லாததால் எப்படி சொந்த ஊருக்கு செல்வது என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளார்

அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சுரேஷ்குமாரின் பைக்கை திருடி மனைவி குழந்தையுடன் சொந்த ஊரான மன்னார்குடி சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் மன்னார்குடியிலிருந்து பைக் உரிமையாளருக்கு, பைக்கை கொரியர் மூலம் அனுப்பி உள்ளார். பேக்கிங் மற்றும் அனுப்பும் சார்ஜ் முழுவதையும் அவரே கட்டிவிட்டார்

இந்த நிலையில் பைக் காணாமல் சோகமாக இருந்த சுரேஷ்குமாருக்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதில் உங்கள் பைக் டெலிவரிக்கு தயாராக இருப்பதாகவும் வந்து உடனே எடுத்துக்கொள்ளவும் என்றும் கொரியர் அலுவலர் கூறியுளார். இதனையடுத்து அவர் கொரியர் அலுவலகம் சென்று பார்த்தபோது தனது பைக் நல்ல கண்டிஷனில் இருந்தது என்றும் அதில் இருந்த டாக்குமெண்ட்கள் உள்பட அனைத்தும் பத்திரமாக இருப்பதையும் அறிந்தார். இதனையடுத்து பைக்கை திருடிய நபர் தனது சொந்த ஊரில் இருந்து அதனை அனுப்பி உள்ளது அவருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!

போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு

கொரோனா வைரஸ் ஆற்றல் இழந்து வருகிறது!!! மகிழ்ச்சித் தெரிவித்த இத்தாலி விஞ்ஞானிகள்!!!

இத்தாலி, கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

'கண்ணான கண்ணே, நீ கலங்காதே'! விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை