close
Choose your channels

மாரடைப்பால் இறந்து 6 மணி நேரத்திற்கு பின்னர் உயிர்த்தெழுந்த பெண்..!

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது அதீத பனியால் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்திலேயே மூர்ச்சையானார். அவரது கணவர் அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கருதப்பட்ட பெண் 6 மணி நேரத்திற்கு பிறகு உயிர்பிழைத்தார்.

ஆட்ரே மாஷை சோதித்த மருத்துவர் கூறுகையில், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால், உடலில் தாழ்வுவெப்பநிலை காணப்பட்டதால் அது அவரது மூளையைத் தாக்காமல் பாதுகாத்துள்ளது. இதனாலே இவர் 6 மணி நேரத்துக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார்” என்றார்.

அப்பெண் குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் மாரடைப்பு அதீத குளிரால் ஏற்பட்டது. ஆனால், அதே குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் அவரால் மீண்டும் உயிர் பிழைக்க முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “சர்வதேச அளவில் எப்படியெனத் தெரியவில்லை. ஆனால், ஸ்பெயினைப் பொறுத்தவரையில் ஒருவர் 6 மணி நேரம் இதயத்துடிப்பு இன்றி மீண்டும் பிழைத்திருப்பது இது முதல்முறை” என்றுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.