மாரடைப்பால் இறந்து 6 மணி நேரத்திற்கு பின்னர் உயிர்த்தெழுந்த பெண்..!

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது அதீத பனியால் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்திலேயே மூர்ச்சையானார். அவரது கணவர் அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கருதப்பட்ட பெண் 6 மணி நேரத்திற்கு பிறகு உயிர்பிழைத்தார்.

ஆட்ரே மாஷை சோதித்த மருத்துவர் கூறுகையில், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால், உடலில் தாழ்வுவெப்பநிலை காணப்பட்டதால் அது அவரது மூளையைத் தாக்காமல் பாதுகாத்துள்ளது. இதனாலே இவர் 6 மணி நேரத்துக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார்” என்றார்.

அப்பெண் குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் மாரடைப்பு அதீத குளிரால் ஏற்பட்டது. ஆனால், அதே குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் அவரால் மீண்டும் உயிர் பிழைக்க முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “சர்வதேச அளவில் எப்படியெனத் தெரியவில்லை. ஆனால், ஸ்பெயினைப் பொறுத்தவரையில் ஒருவர் 6 மணி நேரம் இதயத்துடிப்பு இன்றி மீண்டும் பிழைத்திருப்பது இது முதல்முறை” என்றுள்ளனர்.

 

More News

கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை - நிர்மலா சீதாராமன்

கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்ப

தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168வது திரைப்படமான 'தலைவர் 168' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!

விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது